Skip to main content

வன்முறை மூண்ட இடம் செல்ஃபி பாயிண்ட்டாக மாறியது! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

sri lanka incident selfie point peoples

 

இலங்கையில் வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு இடையில் கொழும்பு காலிமுகத்திடலில்  மக்களின் அமைதி போராட்டம் தொடர்கிறது. இதேவேளையில், பிரதமர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் சிலர் சூறையாடினர். 

 

நாட்டை நெருக்கடியில் தள்ளிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி முதல் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அங்கு வன்முறை வெடித்தது. 

 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கார்கள் கொளுத்தப்பட்டன. ராஜபக்சே பூர்வீக இல்லம் கொளுத்தப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த இடம் தற்போது செல்ஃபி பாயிண்ட்டாக மாறியுள்ளது. 

 

மஹிந்த ராஜபக்சே பதவி விலக காரணமான, இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் புகைப்படமாகப் பதிவு செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில், இங்கு பலரையும் செல்போன் கையுமாகப் பார்க்க முடிகிறது. 

 

காலை 07.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்தனர். பெட்ரோல், டீசலை வாங்கவும், உணவுப் பொருட்களை வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆயினும், கொழும்பு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே, காலிமுகத்திடலில் அமைதி வழிபோராட்டம் நடத்துவோரைக் கலைக்க நீதிமன்றம் மூலம் காவல்துறை முயற்சிப்பதைக் கண்டித்து புதுக்கடை நீதிமன்றம் முன்பாக பொதுமக்கள் மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.