இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

s

இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை நேற்ரு இரவு 8 மணி நிலவரப்படி 215 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.