Skip to main content

ஒமிக்ரானுக்கு எதிராக 75 சதவீத செயல்திறன் கொண்டது ஸ்புட்னிக் தடுப்பூசி - ஹமலேயா ஆராய்ச்சி மையம் தகவல்!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

sputnik v

 

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் காரணமாகவே தற்போதைய கரோனா அலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பைசர் போன்ற தடுப்பூசி நிறுவனங்கள், ஒமிக்ரான் கரோனாவுக்கு எதிரான பிரத்தியேக தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தநிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரித்து வரும் ஹமலேயா ஆராய்ச்சி மையம், ஸ்புட்னிக் தடுப்பூசி  ஒமிக்ரானுக்கு எதிராக 75 சதவீத செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், ஆறு மாதங்களில் ஸ்புட்னிக் லைட்டை பூஸ்டராக செலுத்திக்கொண்டால்,  ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு 100 சதவீதம் அதிகரிப்பதாகவும், ஒருவேளை ஸ்புட்னிக் லைட்டை செலுத்திக்கொள்ளவில்லையெனில்  ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு 56-57 சதவீதமாக குறைந்துவிடுவதாகவும்  ஹமலேயா ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

 

இந்தியாவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதமே ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டும், அது இன்னும் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ஒமிக்ரான் துணை மாறுபாட்டை கவலைக்குரியதாக அறிவியுங்கள் - ஆய்வை சுட்டிக்காட்டி அமெரிக்க நிபுணர் கோரிக்கை!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corona

 

இந்தியா மற்றுமின்றி  பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 மாறுபாடு அதிகம் பரவியது.

 

இந்தநிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஆய்வின் ஒன்றின் முடிவுகள், பிஏ.2 மாறுபாடு ஒமிக்ரானை விட அதிகம் பரவலாம் எனவும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும், தடுப்பூசி தரும் எதிர்ப்பு சக்தியிலிருந்து பிஏ.2 மாறுபாடு தப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆய்வை சுட்டிக்காட்டியுள்ள முன்னணி பொது சுகாதார நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங், ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2வை கவலைக்குரிய கரோனா வகையாக அறிவிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.