Advertisment

காது வலிக்கு மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

j

மூதாட்டி ஒருவரது காதில் சிலந்தி ஒன்று வலை பின்னி வாழ்ந்து வந்த சம்பவம் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள மின்மயாங் மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் நேற்று வந்துள்ளார். மருத்துவரை பார்த்த அவர் தனக்கு கடுமையான காதுவலி இருப்பதாகவும், அதனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் மருத்துவர் அவரது காதில் சோதனை செய்து பார்த்ததில் கடும் அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

அந்த மூதாட்டியின் காதில் சிலந்து ஒன்று உயிருடன் வலை பின்னி வாழ்ந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர், கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அந்த சிலந்தியையும், அது கட்டியிருந்த கூட்டையும் வெளியே எடுத்துள்ளனர். மேலும் சிலந்தி காதுக்குள் புகுந்து கூடு கட்டும் வரையில் அந்த மூதாட்டி என்ன செய்துகொண்டிருந்தார், ஏன் அவருக்கு அதுகுறித்து முன்கூட்டியே தெரியவில்லை என்ற கோணத்தில் மருத்துவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.ஆனால், தனக்கு அதுகுறித்து முன்கூட்டியே எதுவும் தெரியவில்லை என்றும், சில நாட்களாகவே காது வலித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

shocked
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe