நிலவில் மோதவுள்ள எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட் - ஆவலோடு காத்திருக்கும் நாசா!

space x

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு,'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' என்ற ராக்கெட்டை ஏவியது.விண்வெளி வானிலை செயற்கைக்கோளைஅனுப்புவதற்காகஏவப்பட்ட இந்த ராக்கெட் தனது பணியை முடித்தபோதிலும், போதுமான எரிபொருள் இல்லாததால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

இதனைத்தொடர்ந்து இந்த ராக்கெட் விண்வெளியிலேயேகை விடப்பட்டது. இந்தநிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட இந்த'தி ஃபால்கன் 9 பூஸ்டர்'நிலவில் மோதவுள்ளது. நிலவில் மோதியதும் இந்த ராக்கெட் வெடித்து சிதறும் என்றும், நிலவில் சிறிய பள்ளம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நாசா,தி ஃபால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் மோதுவதால், நிலவில் ஏற்படும் பள்ளத்தை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதோடு, ராக்கெட் மோதுவதால் ஏற்படும் பள்ளம் ஏற்படவுள்ள நிகழ்வை, ஆராய்ச்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது. 'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' வரும் மார்ச் 4 ஆம் தேதி நிலவில் மோதும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

moon NASA spacex
இதையும் படியுங்கள்
Subscribe