Skip to main content

அறிமுகமானது சோனி எக்ஸ்பெரியா எல்3 ஸ்மார்ட் ஃபோன்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃபோனான ‘எக்ஸ்பெரியா எல்3’ இன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
 

sony

 

சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ஃபோனான ‘எக்ஸ்பெரியா எல்3’ மாடலை இன்று பார்சிலோனாவில் நடைபெற்ற செல்போன் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

5.7 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஃபிங்கர்பிரிண்ட், ஆக்டோ-கோர் பிராசஸெர்சரில் செயல்படும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 512 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

இந்த ஃபோனின் பின்புறத்தில் 13 எம்.பி மற்றும் 2 எம்.பி என இரட்டை கேமராக்கள் கொண்டுள்ளது. மேலும் டிஜிட்டல் ஃப்ளாஷ் வசதிகொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இது பட்ஜெட் விலை ஃபோன் என்று அற்முகப்படுத்தியிருக்கும் அந்நிறுவனம் இன்னும் இந்திய மதிப்பில் இதன் விலை என்ன என்பதை சொல்லவில்லை. மேலும் இடங்களுக்கு ஏற்றவாறு விலையில் மாற்றம் இருக்குமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

90-ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ... திரைப்படமாக உருவாகும் 'சக்திமான்'

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

sakthimaan series set to be made into movie

 

90 களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தொடர் சக்திமான். இந்த தொடர் 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இத்தொடரை பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா நடித்து தயாரித்திருந்தார். இந்தி மொழியில் எடுக்கப்பட்டு பிறமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த தொடர் 90ஸ் கிட்ஸ்களின் விருப்ப தொடராக இருந்து வந்தது. 

 

ad

 

இந்நிலையில் சக்திமான் தொடர் திரைப்படமாக உருவாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த தகவல் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ள சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மிரட்டலான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

Next Story

ஐபிஎல் தொடர்: மும்மடங்கு தொகையை எதிர்பார்க்கும் பிசிசிஐ; முட்டி மோதவுள்ள  டிஸ்னி -சோனி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

ipl

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலம், மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் 2023 முதல் 2027 வரைக்குமான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, 40 முதல் 45 ஆயிரம் கோடி வரை ஏலம் போகலாம் என பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் நெட்வொர்க் 16, 347 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

 

ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற சோனி, டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், ரிலையன்ஸ்-வயாகாம் 18, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் காத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் கடந்தமுறையை விட மும்மடங்கு தொகையை பிசிசிஐ எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய தயங்கமாட்டோம் என டிஸ்னி கூறியுள்ள நிலையில், சோனி நிறுவனமும் இந்த ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இரு நிறுவனங்களுக்குமிடையே ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.