Skip to main content

தேங்காய் உரிப்பதாக நினைத்துக்கு கொண்டு மருமகனின் கழுத்தை அறுத்த மாமனார்!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

தேங்காய் உரிப்பதாக நினைத்துக் கொண்டு மாமனார் ஒருவர் மருமகனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோஜர் படே என்பவர், தனது மருமகன் எட்வார்டோ மற்றும் அவரது நண்பர் என்கிரிட் உடன் சேர்ந்து மது அருந்திகொண்டிருந்தார். மது போதையில் மூவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று எழுந்து பார்த்த எட்கிரிட்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 

gm



ரோஜர் தனது மருமகனான எட்வார்டோவை கண்ணை மூடியபடி கழுத்தை அறுத்துகொண்டிருந்தார். இதனை பார்த்த அவர், பயத்தில் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் ரோஜருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாகவும், தேங்காய் உறிப்பதாக எண்ணி தனது மருமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு தொழிலதிபர் படுகொலை

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

Businessman passed away in Chennai

 

சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் உடல் பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு சாலை ஓரமாக வீசப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை நெற்குன்றம் சின்மயா நகரில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் ஏதோ ஒன்று கருப்பு பைகளில் கட்டப்பட்டு மிதப்பதாகத் துப்புரவுத் தொழிலாளர்கள் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த காவலர்கள் பைகளில் கட்டப்பட்டு வாய்களில் துணிவைத்து கட்டி இருந்தது தொழிலதிபரின் சடலம் என கண்டுபிடித்தனர். கொலை செய்யப்பட்டவர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயதான பாஸ்கர் என்பதும் தன்னுடைய மகனுடன் இணைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. 

 

பாஸ்கரின் செல்போன் என்னை நேற்று முதல் தொடர்பு கொள்ள முடியாததால் அவரை காணவில்லை என அவரது மகன் கார்த்திக் நேற்று இரவு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் விசாரித்ததில்  நேற்றிரவு பாஸ்கரின் எடிஎம் அட்டையிலிருந்து இரு முறை 10000 எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. அவரது சடலம் இருந்த இடத்திற்கு அருகே அவரது காரும் இருந்தது கண்டெடுக்கப்பட்டது.

 

 

Next Story

அசாம் போராட்டத்தில் வன்முறை - இருவர் பலி!

Published on 24/09/2021 | Edited on 25/09/2021

 

jkl

 

அசாமில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது ஏற்பட்ட வன்முறையில், இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் டர்ங் மாவட்டத்தில் உள்ள டோல்பூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 602.04 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதற்கிடையே இந்த இடத்தில் அரசின் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த இடத்தை பார்த்துவிட்டுச் சென்றார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த இடத்தை காலி செய்ய வலியுறுத்தி அங்கிருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை.

 

இந்நிலையில், சில நாட்களாக வாகனங்களைக் கொண்டு வந்து அதிகாரிகள், ஆக்கிரமிப்புக்களை அகற்றத்தொடங்கினார்கள். இதில் பயந்த சில குடும்பத்தினர், அங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்குச் சென்றனர். இந்நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வேண்டும், நிவாரணம் தர வேண்டும் எனக் கூறி அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், அது தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியானார்கள். இருந்தும், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.