Skip to main content

தந்தையின் பிணத்தை சொகுசு காரில் வைத்து புதைத்த மகன்!

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

உயிரிழந்த தந்தையின் உடலை சொகுசு காருக்குள் வைத்து மகன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. 
 

car

 

 

 

நைஜீரியாவில் உள்ள அனம்ப்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜுபுகி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச்சடங்கை பி.எம்.டபிள்யூ காரில் வைத்து நடத்துவதாகவும், அவரை அதில் வைத்தே புதைப்பதாகவும் வாக்கு தந்திருந்தார். 
 

அதை நிறைவேற்றும் விதமாக இந்திய மதிப்பில் ரூ.42 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்றை விலைக்கு வாங்கி, அதை தனது தந்தையின் சவப்பெட்டியாக மாற்றியிருக்கிறார் அந்த பாச மகன். குழிக்கு அருகில் ஒரு கார் நிற்க, அதைச் சுற்றி கறுப்பு உடை அணிந்த சிலர் இறுதிச்சடங்கை செலுத்தும் இந்தப் புகைப்படம் முகநூலில் பல ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது. இதை பைத்தியக்காரத் தனம், சுயநலம் என ஒருவரும், பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு இதைச் செய்யவேண்டும்; அவர்கள் இறந்தபின்னர் நல்ல சவப்பெட்டியில் புதைக்கவேண்டும். இப்படி முட்டாள்தனமாக பந்தா செய்யக்கூடாது என ஒருவரும் என பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 

 

சில வாரங்களுக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது தந்தையை, அவர் நீண்டகாலம் பயன்படுத்திய காருக்குள் வைத்து புதைத்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

போதைப்பொருள் கடத்திய நைஜீரியர்; சென்னை நீதிமன்றம் அதிரடி

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

 chennai special court judgement delivered for nigerian involved illegal work

 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த காட்வின் என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காட்வினிடம் இருந்த போதைப்பொருளைக் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கானது சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, போதைப்பொருளை கடத்தி வந்த காட்வினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

 

Next Story

பிரதமர் மோடியின் மாடல்; நைஜீரியாவில் பெரும் பதற்றம் 

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

200 and 500 rupee notes have been declared invalid  Nigeria and people are suffering

 

இந்தியாவைப் போன்று நைஜீரியாவில் மேற்கொண்ட அதே நடவடிக்கையால் அந்நாட்டில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என திடீரென அறிவித்திருந்தார். அதன் பெயர் டீமானிடைசேஷன் எனக் கூறப்பட்டது. மேலும், நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இத்தகைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியிருந்தார். இது நாட்டு மக்களுக்கு பேரிடராக அமைந்தது எனக் கூறுவது தான் யதார்த்தம்.

 

இந்நிலையில், இந்திய அரசைப் பின்தொடர்ந்து நைஜீரியாவிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்தாண்டு அக்டோபரில் அறிவித்திருந்தது. அதன்படி 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள ஜனவரி 31ம் தேதியை கடைசி நாளாக அறிவித்த நிலையில்  பிப்ரவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள வங்கிகளில் புதிய நைரா நோட்டுகள் போதுமான அளவில் இல்லாததால், நைஜீரியன் நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு வங்கிகள் விதித்துள்ளது. இதனால் கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த நைஜீரியன் நாட்டு மக்கள், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி கிளைகளையும் ஏடிஎம் மையங்களையும் அடித்து நொறுக்கிய பொதுமக்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நைஜீரியா நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

சிவாஜி