Skip to main content

மக்களுக்குத் திடீர் பாதிப்பு; ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி செலுத்துவதை நிறுத்திய உலக நாடுகள்!

Published on 12/03/2021 | Edited on 13/03/2021

 

OXFORD VACCINE

 

உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு எதிராக, சில நாடுகள் தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து மக்களுக்குச் செலுத்தத் தொடங்கியது மட்டுமில்லாமல், பல்வேறு உலக நாடுகளுக்கும் வழங்கின. 

 

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் பிற நாடுகளுக்கும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், டென்மார்க் நாடு, இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி, தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, ருமேனியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அதே காரணத்தைக் கூறி தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளதோடு, தாங்கள் அந்த தடுப்பூசி குறித்து ஆய்வுசெய்து செய்து வருவதாகவும் கூறியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், தடுப்பூசியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடரப்போவதாக தெரிவித்துள்ளன. 'ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனெகா' தடுப்பூசியை இந்தியாவில், சீரம் நிறுவனம் 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ தேர்வு - அதன் பொருள் என்ன தெரியுமா?

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Rizz' chosen as the word of the year 2023...do you know what it means?

 

ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டு மக்கள் மனநிலை ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில், 8 சிறந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 8 வார்த்தைகளில் சிறந்த வார்த்தையை முடிவு செய்வதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பின் முடிவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ் (Rizz) என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தை, காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

 

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் இணையரை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது Charisma என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் (to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம். 

 

 

Next Story

“காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” - உலக சுகாதார நிறுவனம் வேதனை 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

WHO President says about Gaza

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கு இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இந்த நிலையில், காசாவின் அவலநிலை குறித்து உலக சுகாதாரம் நிறுவனம் தனது வேதனையை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்டோஸ் அதானோம் கூறியிருப்பதாவது, “காசாவில் அனஸ்தீசியா (Anaesthesia) கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.