Skip to main content

ஒமிக்ரான் பரவலால் ஆபத்தான புதிய வகை கரோனா உருவாகலாம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

omicron

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பைக் ப்ரோட்டினில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளுடன் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளைக் கொண்டுள்ள இந்த ஒமிக்ரான், இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கரோனா அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில் உலகமெங்கும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு, ஆபத்தான புதிய வகை கரோனாவை உருவாக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அவசரநிலை அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது; ஒமிக்ரான் எவ்வளவு அதிகமாக பரவுகிறதோ, எவ்வளவு அதிகமாக நகலெடுத்துக்கொள்கிறதோ, அந்தளவிற்கு புதிய கரோனா திரிபு  உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.

 

இப்போது ஒமிக்ரான் ஆபத்தானது, அது மரணத்தை ஏற்படுத்தலாம். அதன் தீவிரம் டெல்டாவை விட சற்று குறைவாக இருக்கலாம், ஆனால் அடுத்த திரிபு எவ்வாறு இருக்கும் என யாரால் சொல்ல முடியும்?. ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது அது கடுமையாக பாதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும், இறக்க வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு கேத்தரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ஒமிக்ரான் துணை மாறுபாட்டை கவலைக்குரியதாக அறிவியுங்கள் - ஆய்வை சுட்டிக்காட்டி அமெரிக்க நிபுணர் கோரிக்கை!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corona

 

இந்தியா மற்றுமின்றி  பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 மாறுபாடு அதிகம் பரவியது.

 

இந்தநிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஆய்வின் ஒன்றின் முடிவுகள், பிஏ.2 மாறுபாடு ஒமிக்ரானை விட அதிகம் பரவலாம் எனவும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும், தடுப்பூசி தரும் எதிர்ப்பு சக்தியிலிருந்து பிஏ.2 மாறுபாடு தப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆய்வை சுட்டிக்காட்டியுள்ள முன்னணி பொது சுகாதார நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங், ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2வை கவலைக்குரிய கரோனா வகையாக அறிவிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.