பாம்பைக் கண்டால் பயப்படாதவர்கள் யாரும் இல்லை எனலாம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் நடுங்குவார்கள். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி கூட உள்ளது. எதிரியை எதிர்கொள்ளும் தைரியத்துடன் இருப்பவர்களே பாம்பைக் கண்டு பயப்படும்போது நம்மைப் போன்ற பொது ஜனங்கள் எம்மாத்திரம் என்ற அடிப்படையில் அந்த சொல்லாடல் பயன்படுத்த படுவதும் உண்டு. ஆனால், வெகு சிலர் பாம்பை அசால்டாக கையில் பிடித்து விளையாடும் அளவிற்குப் பாம்புகள் மீது பயம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் சில நேரங்களில் பாம்புகளைப் படித்து விளையாடுவதை நாம் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்போம். சிலர் பாம்புடன் விளையாடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகியுள்ளனர். ஆனால் சமீபத்தில் Reptile Hunter என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றில் சிறுவன் ஒருவன் பாம்புடன் சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சிறுவன் சீண்டலைப் பொறுத்துக்கொள்ளாத அந்த பாம்பு அவரது தலையைக் கவ்வி விடுகிறது. இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ்நத வீடியோ பார்த்துப் பார்த்து வருகின்றனர்.
சேட்டை செய்த இளைஞரை வேட்டையாடிய மலைப்பாம்பு!
சார்ந்த செய்திகள்
Next Story
பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!
புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.
பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Next Story
ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.
தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.