Skip to main content

12 ஆயிரம் மக்களை பரிதவிக்க வைத்த ஒற்றை நத்தை... உலகையே ஆச்சரியப்பட வைத்த வினோத சம்பவம்...

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

கடந்த மே 30ம் தேதி மின்சார கோளாறு காரணமாக ஜப்பான் நாடு முழுவதும் முக்கியமான 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஜப்பான் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவமாக இது உலக மக்களால் பார்க்கப்பட்டது.

 

small snail stops 25 bullet trains in japan

 

 

நிலநடுக்கம்,கன மழை என எந்த காரணத்தினாலும் நிற்காமல், தாமதம் ஆகாமல் இயங்கும் ஜப்பான் ரயில்களை நிறுத்தியது ஒரு சிறிய நத்தை என தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி தெற்கு ஜப்பானில், புல்லட் ரயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இதற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆரம்பித்த புல்லட் ரயில் ஊழியர்கள், ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் உயிரிழந்த நிலையில் நத்தை ஒன்றை மீட்டுள்ளனர். அதன் பின்னரே 25 ரயில்களை இயக்க முடியாமல் போனதற்கு அந்த நத்தை தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

கட்டுப்பட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை கடக்க முயன்ற போது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து, அதனால் ஷாட் சர்கியூட் ஆனதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இயற்கை பேரிடர்களாலேயே நிறுத்த முடியாத ஜப்பான் ரயில்களை ஒரு நத்தை ஒரு நாள் முழுவதும் முடங்கியுள்ளது உலகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்