Advertisment

யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு! - சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் உருக்கம்!

அமெரிக்காவின் சான் புரூனோவில் உள்ளது யூடியூப் தலைமைச் செயலகம். இங்கு நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், அங்கிருந்த ஊழியர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; நால்வர் படுகாயமடைந்தனர்.

Advertisment

San

மிகக் கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்தப்பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கூகுள் பணியாளர்கள் மற்றும் பொது சமூகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு குறித்து கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூகுள் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

Advertisment

அதில், ‘சான் புரூனோவில் உள்ள நமது யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நம் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு பாதுகாப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது எல்லோரும் பாதுகாப்பாக உள்ளதாக ஆறுதலான தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையின் மோசமான இந்த வெறியாட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டு, நால்வர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். நீங்கள் எல்லாம் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்திருக்க மாட்டீர்கள் என்பதை அறிவேன். இனிவரும் நாட்களில் கூகுள் குடும்பம் இந்த மோசமான தாக்குதலில் இருந்து வெளிவருவதற்கான வேலைகளில் ஈடுபடுவோம்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.

google sundarpichai Youtube
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe