Skip to main content

வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட மாணவி... திருப்பத்தூரில் அதிர்ச்சி! 

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

shocked in Tirupathur!

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்துள்ளது செல்லரபட்டி ஊராட்சி. இப்பகுதியில் வசித்து வந்த விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல்துறையினர் அப்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணின் காலில் அணிந்திருந்த காலணியைத் தடயமாக வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

 

விசாரணையின் முடிவில் அவர் செல்லரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று தெரியவந்தது. அரசு தேர்வுகளுக்கு முயன்று வந்த அமலா அதற்கான பயிற்சி வகுப்புகளுக்காக சென்று வந்த நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். அமலா ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்ததால் அவருடன் சென்றிருக்கலாம் என நினைத்த பெற்றோர்கள் தேடாமல் இருந்துள்ளனர். ஆனால் 23ஆம் தேதி அன்று அவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்ததும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 

shocked in Tirupathur!

 

இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அமலாவின் செல்போனை வேறு ஒரு நபர் உபயோகித்து வந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்லரப்பட்டி சேர்ந்த மகேந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.  அமலாவின் வீடும் மகேந்திரனின் வீடும் அருகருகே உள்ள நிலையில், அமலாவிற்கும் மகேந்திரனுக்கும் சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் மகேந்திரன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதால் தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக மகேந்திரன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

 

ஆறு வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூர் வந்த மகேந்திரன் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்துள்ளான். ஆனாலும் அமலாவை ஒருதலையாகக் காதலித்து வந்த மகேந்திரனுக்கு, அமலா வேறு ஒரு நபரை காதலித்து வந்த செய்தி தெரிய வந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த அன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த அமலாவை மகேந்திரன் வழி மறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அமலா மகேந்திரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகேந்திரன், கொலை செய்து கை கால்களைத் துப்பட்டாவில் கட்டி கிணற்றில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.