/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sheik-hasina-art-1_0.jpg)
வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வங்கதேச அரசு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது அதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் ஷேக் க்ஹாசீனாவை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வங்கதேச அரசு இந்தியாவுக்கு வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் இந்த முடி எடுத்ததால் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் முன், தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)