Skip to main content

"அந்தக்காலத்தில் தொலைபேசியே இல்லை, பிறகு எப்படி.." ராமர் குறித்து கே.பி.சர்மா ஒலி சர்ச்சை கருத்து...

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

sharma oli claims ram as nepali

 

ராமர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்தியாவுடனா எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து இந்தியாவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் கே.பி.சர்மா ஒலி. அந்தவகையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும், அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "உண்மையான அயோத்தி பிர்கஞ்சின் மேற்கில் உள்ள தோரி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், ராமர் இந்தியாவில் பிறந்தார் என்று இந்தியா கூறுகிறது. இந்தத் தொடர்ச்சியான கூற்றுகள் காரணமாக, சீதா இந்தியாவின் இளவரசர் ராமரை மணந்தார் என்று நாங்கள் நம்பி வந்தோம். இருப்பினும், உண்மையில், அயோத்தி பிர்கஞ்சிற்கு மேற்கே அமைந்துள்ள ஒரு கிராமம் எனத் தெரிய வந்துள்ளது. 

 

சீதா திருமணம் செய்த ராமர் ஒரு இந்தியர் என்ற நம்பிக்கையின் கீழ் இப்போது வரை நாங்கள் இருந்தோம். ஆனால் அவர் இந்தியர் இல்லை, அவர் நேபாளி. பால்மிகி ஆசிரமும், மகனைப் பெறுவதற்கான மன்னர் தசரதர் சடங்குகள் செய்த புனித ஸ்தலமும் ரிடியில் உள்ளது. சீதாதேவியின் ஜானக்பூர் இங்கேயும், அயோத்தி அங்கேயும் இருக்கிறது. அந்தக்காலத்தில், திருமணம் பற்றிப் பேச தொலைபேசியோ, மொபைலோ இல்லை. அப்படி இருக்கும் போது ராமருக்கு ஜானக்பூர் பற்றி எப்படித் தெரியும்" எனக் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்க அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Permission to set up a KFC restaurant in Ayodhya and condition

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வருவதால், அவர்களின் வசதிக்காக உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதே வேளையில், அந்த கோவிலைச் சுற்றியுள்ள 15 கி.மீ வரை அளவிலான இடத்தை சுற்றி அசைவ உணவகங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீ சுற்றளவில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி உணவகம் போன்ற பன்னாட்டு உணவகத்தில், அசைவ உணவகம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களில் சைவ உணவுப் பட்டியல் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை - அயோத்தி இடையே நேரடி விமான சேவை!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Direct flight service between Chennai - Ayodhya

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பகத்ர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்  ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று (01.02.2024) முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - அயோத்தி, அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 03.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.

அதே விமானம் மறுமார்க்கமாக மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 06.20 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த விமானம் போயிங் 737-8 வகை விமானம் என்பதால் ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.