Skip to main content

அலுவலகத்தில் தூங்கியவருடன் செல்பி எடுத்த நண்பர்கள்...வைரலாகும் புகைப்படம்!

Published on 17/01/2020 | Edited on 18/01/2020

தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் உலகில் நடக்கும் விநோதமான செயல்கள் அனைத்தும் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இளைஞர் ஒருவர் தூங்குவதை புகைப்படம் எடுத்த அவரின் நண்பர்கள் அதனை வைரல் ஆக்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியள்ளது. 



இங்கிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். உடல் பருமனான அவர் அலுவலகத்திலேயே அடிக்கடி தூங்கி விடுவார். இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் அமர்ந்த நிலையிலேயே அவர் தூங்கிவிட்டார். ஆனால் அவருடைய நண்பர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. அலுவலகத்தில் உள்ள அனைவரும் அவருடன் செல்பி எடுத்து, அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்