Skip to main content

'இன்ப திருமணம்' என்ற பெயரில் பாலியல் தொழில்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019


'இன்பத் திருமணம்' உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாக உள்ள ஒரு சொல். திருமணம் ஒரு சாதாரண வார்த்தை தானே? அதில் என்ன பேசு பொருள் என்று யாரும் கருத முடியாதபடி தற்போதைய கள சூழ்நிலைகள் அதனை பொய்யாக்கி வருகிறது. அரபு நாடுகளில் அதுவும் ஈராக் போன்ற நாடுகளில் இந்த வகையான திருமணங்கள் சகட்டு மேனிக்கு நடைபெற்று வருகிறது. ஒரு குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே நடைபெற்று வந்த இத்தகைய திருமணங்கள் தற்போது உலகம் முழுவதும் விரைவில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலில் இன்பத்திருமணம் என்றால் என்ன? என்பது குறித்தும், அதன் பின்னணியில் உள்ள உள் அரசியலையும் அறிந்துகொள்வதே இந்த விஷயம் குறித்து நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள உதவும். 
 

ghk



அதன்படி, விவாகரத்தான ஆண்கள் மற்றும் திருமணம் முடியாத சில இளைஞர்கள் தங்கள் உடல் இச்சைக்காக 10 முதல் 12 வயது வரை உள்ள சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளும் முறையே இன்பத் திருமணம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் இருந்து அதிகபட்சமாக  99 ஆண்டுகள் வரை சிறுமிகளை குத்தகைக்கு எடுத்து காமுகர்கள் தங்களது இச்சைகளை இந்த திருமணம் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த திருமணம் அரபு நாடுகளில் மிகப் பிரபலம் என்றாலும் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுமிகளின் குடும்ப வறுமையை சாதகமாக்கிக் கொண்டு சில மத குருமார்கள், அவர்களை இன்பத் திருமணம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஈராக்கில் பிபிசி-ன் செய்தியாளர் ஒருவர், இதனை மறைமுகமாக படம் பிடித்து ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தின் மூலமாகவே இந்த கொடூரம் அம்பலமாகியிருக்கிறது. 

 

 

fgh



பெரும்பாலும் 10 வயதை கடந்த சிறுமிகள், இன்பத் திருமண முறையில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சிறுமிகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் கால நேரத்துக்கு ஏற்ப வரதட்சணை கொடுக்க வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இந்த நடைமுறையை சில மதகுருமார்கள் நியாயப்படுத்தும் சம்பவமும் நடைபெறுகிறது. "சிறுமிகளிடம் ஒப்புதல் பெற்றே இந்த திருமணம் நடப்பதால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும், அவர்களுக்கு வரதட்சணையாக பணம் கொடுப்பதால் இதில் எந்த தவறும் இல்லை என்றும் மதகுருமார்களில் சிலர் சொல்கிறார்கள். மேலும், சிறுமிகள் கர்ப்பமடையாமல் இருக்க அவர்களுக்கு கருத்தடை ஊசி போடப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

17 வயது சிறுமிக்கு திருமணம்; கணவர் கைது!

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

Married to a 17-year-old girl; Husband arrested!

 

சேலம் அருகே, 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக கணவர், மாமனார் ஆகியோரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி ரஞ்சித்குமார் என்ற இளைஞருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி மோகனா சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தன் கணவருடன் தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி மோகனா எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு முடித்திருந்த நிலையில், உறவினர் ரஞ்சித்குமாருக்கு இருதரப்பு பெற்றோர்களும் கூடிப்பேசி கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளதும், இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை என்பதும் தெரியவந்தது. 

 

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்குமார், அவருடைய தந்தை ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர், கணவரின் தாய் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருகின்றனர். 

 

 

Next Story

தீட்சிதர் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம்; வீடியோ வெளியாகி அதிர்ச்சி

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Child marriage of Dikshit's children; Shocking when the video was released

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக அண்மையில் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக அண்மையில் சர்ச்சை வெடித்தது. குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, திருமணம் நடைபெற்றதாக பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

ஓராண்டாகவே இந்த விவகாரம் வெடித்து வந்த நிலையில் ஆளுநரின் பேச்சையடுத்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் சிதம்பரம் பகுதியில் முகாம் இட்டு விசாரணையில் ஈடுபட்டு வந்தார். அதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.