Skip to main content

இனி யார் அனுமதியும் தேவையில்லை... சவுதி அரசின் புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் பெண்கள்....

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், விஷன் 2030 என்ற பெயரில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்தி வருகிறது அந்நாட்டு அரசு. மேலும் சவுதியை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

 

saudi allows women to fly without family permission

 

 

இதன் ஒரு பகுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டன. வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, பெண்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பெண்களை நியமித்தது என பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது சவுதி பெண்களிடையேயும், உலக நாடுகளிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள், ஆண்  அனுமதி இன்றி விமான பயணங்களை மேற்கொள்ளலாம் என் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அந்நாட்டுப் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் தந்தை, கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்து வந்தது.

ஆனால் இந்த புதிய அறிவிப்பின்படி இனி 21 வயது நிரம்பிய எந்த ஒரு பெண்ணும் ஆண்களின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பு அந்நாட்டு பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.