ACT

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்தோனேசியா, பெண்கள்மணமானவர்களுடன்அல்லது உறவினர்களுடன்மாட்டுனம்தான் உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியும் அப்படி இல்லையென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்துஉணவு உண்ண முடியாது மேலும் இரவு 9 மணிக்கு மேல் தனியாக சாப்பிட வரும் பெண்களுக்கு ஓட்டல் உணவு தரக்கூடாது எனவும் சட்டம் விதித்துள்ளது.இது பெண்களுக்கு தங்களை பாதுகாத்து கொள்ளஉதவும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisment

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும்உலகின் மிக அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஆஸெஹ் மட்டுமே இடம்பெற்றுள்ளது, பெண்களுக்கு ஒழுக்கநெறிகளைக் கொடுத்ததற்காக கடந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது. மேலும் பெண்கள் மீதான தார்மீக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஓரினச்சேர்க்கை, சூதாட்டம் மற்றும் குடிப்பழக்கம் போன்ற குற்றங்களை எதிர்த்துஉலகளாவிய கண்டனத்தை தெரிவித்து அதனால் உலகநாடுகள்கவனத்தை ஈர்த்த நாடு.

சமீபத்திய கட்டுப்பாட்டின் கீழ், சுமத்ரா தீவில் உள்ள பிரௌன் மாவட்டத்தில் உள்ள பெண்கள், அவர்களது கணவர் அல்லது ஒரு நெருங்கிய ஆண் உறவினர்கள் அல்லாத வேறுஒருவருடன்உணவகங்கள் மற்றும் காபி கடைகளில்ஒரே மேஜையில் அமர்ந்து உணவுபகிர்ந்து கொள்ள முடியாது. அதேபோல் மதிய உணவு இடைவேளையின் போது ஆண் பெண் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும்ஊழியர்கள் என்றாலும் ஒரே மேஜையில் சாப்பிட முடியாது எனவும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

Advertisment

இந்தகட்டுப்பாட்டினால்குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள், ஆனால் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது வரம்புக்குட்பட்டதாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாகாண தலைநகரான பண்டா ஆஸெஹ்வில் இரவு11 மணிக்குப் பின் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களிலிருந்து பெண்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.