Advertisment

கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் - பின்லாந்து, சுவீடனை எச்சரித்த ரஷ்யா!

putin

Advertisment

ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையே உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அனுப்ப புதின் தயார் என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிகாரிகளை போதைப்பொருளுக்கு அடிமையான கும்பல் என்றும், நாஜிக்கள் என்றும் விமர்சித்துள்ளதோடு, நாட்டின் தலைமையை தூக்கி எறியுமாறு உக்ரைன் ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தசூழலில் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது. பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் தொடங்கியபோது, நேட்டோவில் சேரப்போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NATO finland Sweden Russia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe