ADVERTISEMENT
ADVERTISEMENT
மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் நாசா உடனான கூட்டணியை ரஷ்யா முடித்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மை காலமாக உக்ரைன் போர் காரணமாக அமெரிக்காவுடனான பிரச்சனை வலுத்துள்ள நிலையில் இந்த முடிவினை ரஷ்யா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Show comments