Advertisment

இந்தியா, பாகிஸ்தான் விவகாரம்; ரஷ்யா கருத்து...

gvhghghg

Advertisment

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரஷ்யா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ரஷ்யா அதிபர் புதினின் செயலாளர் டிமிட்ரி பெஸ்கொவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரு நாடுகளின் இந்த உறவு நிலை ரஷ்யாவுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லை தொடர்பான இந்த பிரச்சினைக்கு இந்தியா பாகிஸ்தான் விரைவில் சுமூக முடிவைக் காணவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pulwama attack Russia surgical strike
இதையும் படியுங்கள்
Subscribe