Skip to main content

இந்தியாவில் மத சுதந்திரம் மோச நிலை? - அமெரிக்க ஆணையம் விசாரணை!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Is religious freedom in India bad? American commission investigation!

 

இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை குறித்து செப்டம்பர் 20 ஆம் தேதி அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் விசாரணையை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய அரசியல் தளத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் வாஷிங்டனில் இயங்கி வருகிறது. இதன் நோக்கம், உலக நாடுகளில் மத சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதனை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த ஆணையம் கடந்த மே மாதம், 2023க்கான அறிக்கையை வெளியிட்டது. அதில், “2022இல் இந்தியாவில் மத சுதந்திரத்திற்கான நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "இந்த ஆண்டில் இந்திய அரசு அதன் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் மத மாற்றத்தை குறி வைத்த சட்டங்கள் உட்பட மத பாரபட்சமான கொள்கைகளை ஊக்குவித்து செயல்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மதங்களுக்கிடையேயான உறவுகள், ஹிஜாப் அணிவது மற்றும் பசுக்கொலை முதலானவை மற்றும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மீது (பழங்குடி மக்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது" எனக் கூறியுள்ளது. 4வது முறையாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் இந்தியாவை விமர்சித்துள்ளது.

 

ஆனால், இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்தது. அதில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியா குறித்து ஒருதலைபட்சமான கருத்துகளைத் தொடர்ந்து,  இந்த 2023 ஆண்டு அறிக்கையிலும் கூறி வருகிறது. இதுபோன்ற செயல் ஆணையத்தையே இழிவுபடுத்தும். எனவே, இந்த தவறான விளக்கத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இத்தகைய முயற்சிகளில் இருந்து ஆணையம் வெளிவந்து இந்தியாவின் பன்மைத்துவம், அதன் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அதன் அரசியலமைப்பு வழிமுறைகள் பற்றி சிறந்த புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்தது.

 

இந்த நிலையில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவை விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி ஜோ பைடனும் சமீபத்தில் இரண்டு வெற்றிகரமான இருதரப்பு சந்திப்புகளை நடத்தினர். இது நெருங்கிய உறவை பிரதிபலித்தது. ஆனாலும்,  மதமாற்ற எதிர்ப்புச் சட்டம், பசுவதை சட்டங்கள் போன்று சிவில் சமூக சட்டம் என இந்தியா மேற்கொண்டுள்ளது. இது குறித்து யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப். இந்தியாவில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

எனவே, கீழ் குறிப்பிட்டுள்ள அனைவரும் ஆணையத்தின் முன்பு விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பெர்னாண்ட் டி வரேன்ஸ், காங்கிரஸின் சட்ட நூலகத்தின் வெளிநாட்டு சட்ட நிபுணர் தாரிக் அகமது, சாரா யாகர் மனித உரிமைகள் கண்காணிப்பு வாஷிங்டன் இயக்குநர், சுனிதா விஸ்வநாத் இந்துக்கள் மனித உரிமைகளுக்கான செயல் இயக்குநர். மேலும் ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் பேராசிரியர்கள் இர்பான் நூருதீன், ஹமத் பின் கலீஃபா அல்தானி மூவரும் விளக்கமளிக்க வேண்டி அழைக்கப்பட்டுள்ளனர். இதனை புதன்கிழமை, செப்டம்பர் 20, வாசிங்டன் ஹார்ட் செனட் அலுவலக கட்டடத்தில் நடத்த உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து விளக்கமளிக்க அமெரிக்க ஆணையம் அழைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.