Skip to main content

வேட்டைக்காரர்கள் கொடூரம்... தனித்துவிடப்பட்ட ஓர் இனத்தின் கடைசி உயிர்...

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

உலகின் அரியவகை உயிரினங்களில் ஒன்றான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனத்தின் கடைசிப் பெண் ஒட்டகச்சிவிங்கி கொல்லப்பட்டது.

 

rare white giraffe near extinction

 

 

உலகின் மிக அறிய வகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கியானது ஆப்பிரிக்காவின் காடுகளில் வசித்து வருவது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மொத்தம் மூன்று வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளே இந்த இனத்தில் இருந்து வந்தது. இதில் தற்போது இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட நிலையில், எலும்புக்கூடாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவை வேட்டையாடப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தாயும் அதன் குட்டி ஒன்றும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரே ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

அல்பினிசத்திலிருந்து சற்று வேறுபட்ட லூசிசம் எனப்படும் ஒரு மரபணு நிலையைக் கொண்டிருக்கும் இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகளின் தோல் பகுதியில் உள்ள செல்களில் நிறமி உருவாவதைத் தவிர்க்கிறது. ஆனால் கண்கள் போன்ற பிற உறுப்புகள் சாதாரண நிறத்திலேயே இருக்கும். அழிவின் விளிம்பிலிருந்த இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் தற்போது கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதன் மூலம் அந்த இனத்தின் கடைசி உயிர் மட்டும் தற்போது ஆப்பிரிக்கக் காடுகளில் தனித்து விடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Next Story

பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

nn

 

40 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானமானது ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தான்சானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில்  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் சிறிய பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  வானில் சுமார் 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எஞ்சின் பழுதடைந்து எதிர்பாராத விதமாக ஏரிக்குள் பாய்ந்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.