Skip to main content

அது ராமரும் இல்ல, ஆஞ்சநேயரும் இல்ல.. அது ஒரு பழங்குடி தலைவன்- ஈராக் அரசின் விளக்கம்...

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

சிந்து சமவெளி நாகரீகம் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் இந்திய ஆய்வு குழு ஈராக் பயணித்தது. அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா என்ற மலை பகுதியில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் செருகி, மேலாடை அணியாத மன்னர் நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்றும் அமைக்கப்பட்ட குகை ஓவியத்தை கண்டுபிடித்துள்ளனர்.

 

ram painting in iraq cave

 

 

4000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஓவியம் என அது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவ சித்திரங்கள் என அந்த குழு கூறியது. இதனையடுத்து  மத்திய வெளியுறவுத் துறை இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டுமென்றும் அந்தக் குழு பரிந்துரைத்தது. இந்நிலையில் இந்த சிற்பம் கி.மு 2000-ம் ஆண்டில் வாழந்த பழங்குடியினத் தலைவனையும், அவரால் சிறைபடுத்தப்பட்ட எதிரியையும் குறிப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையின் போது அனுமன் பாடல்; கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The gang incident happened the shopkeeper for Hanuman song during prayer

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் (40). இவர் நகரத்பேட்டை பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே மசூதி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி மாலை, மசூதியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். அப்போது, முகேஷ் குமார் தனது கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளார். அதிக சத்தத்துடன் அவர் பாடல்களை ஒலிக்கச் செய்ததால், தொழுகையில் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் 5 பேர் கொண்ட இளைஞர்கள், முகேஷ் குமார் கடைக்கு வந்து, பாடல்களின் சத்தத்தை குறைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால், முகேஷ் குமார் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில், அந்த இளைஞர்கள், முகேஷ் குமாரை சரமாரியாகத் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து முகேஷ் குமார், ஹல்சூர் கேட் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், சுலைமான் (28), ஷாநவாஸ் (29), ரோஹித் (25) உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் புகுந்து 5 பேர் கொண்ட இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

என்ன பேசினார் ஆ.ராசா? பா.ஜ.க., காங்கிரஸ் கொந்தளிக்க காரணம் என்ன?

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Congress condemns A. Rasa speech on jai shri Ram
ஆ. ராசா

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “இந்தியா ஒரு நாடல்ல; ஒரே நாடென்றால் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். அதனால் இந்தியா ஒரு துணைக்கண்டம். இங்கு தமிழ் ஒரு தேசம், ஒரு நாடு; மலையாளம் ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு நாடு; ஒரியா ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு நாடு; இப்படி பல மொழி பல தேசங்கள் இருக்கின்றன. இத்தனை தேசிய இனங்களையும் ஒன்று சேர்த்தால்தான் இந்தியா. 

தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”என கடுமையாக சாடியிருந்தார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Congress condemns A. Rasa speech on jai shri Ram
அமித் மாள்வியா

பாஜக தொழில்நுட்பபிரிவு தலைவர் அமித் மாள்வியா, “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் தொடர்ந்து வருகின்றன. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தற்போது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஆ.ராசா அழைப்பு விடுக்கிறார். கடவுள் ராமைரை கேலி செய்கிறார். மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை கூறுகிறார். இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. பிரதமர் வேட்பாளராக அவர்கள் முன்மொழிந்த ராகுல் காந்தியும் மௌனமாக இருக்கிறார்” என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆ.ராசாவின் காணொளியை பதிவிட்டு அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

இந்த நிலையில் ஆ.ராசாவின் கருத்தில் நான் 100 சதவீதம் உடன்படவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் போது, “ஆ.ராசா கருத்துகளுடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை. இந்த இடத்தில் நான் அவரின் பேச்சை கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். 

Congress condemns A. Rasa speech on jai shri Ram
சுப்ரியா ஷ்ரினே

இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன்.  ராமர் என்பது வாழ்க்கையின் இலட்சியம், ராமர் என்பது கண்ணியம், ராமர் என்பது நெறிமுறை, ராமர் என்பது அன்பு. அவரது பேச்சை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். அவருடைய (ராஜாவின்) கூற்றாக இருக்கலாம், நான் அதை ஆதரிக்கவில்லை, நான் அதைக் கண்டிக்கிறேன், மக்கள் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் குறித்து பேசிய போது இந்தியா கூட்டணியில் சர்ச்சை எழுந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சு மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.