Advertisment

ஒட்டுமொத்த அமைச்சரவையும் காலி; அதிபரை சந்திக்க தயாராகும் ராஜபக்சே - இலங்கை அரசியலில் நெருக்கடி

mahinda rajapaksa

Advertisment

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்துவந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் அளித்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்துள்ளார். ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சேவும், மகனான நமல் ராஜபக்சேவும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், அதனை பிரதமர் அலுவலக வட்டாரம் மறுத்துள்ளது. தற்போது அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ள நிலையில், சற்று நேரத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவைமகிந்த ராஜபக்சே சந்திக்க இருக்கிறார்.

srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe