நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அமைச்சர் வியாழேந்திரன் ராஜபக்சேவுக்கு ஆதரவளித்திருந்தார். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெறும்போது நடுநிலையாக இருந்தால் அராஜகம் வெற்றி ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் அறிவித்துள்ளது.