Skip to main content

மந்திர கோலுடன் வலம் வரும் மகிந்த ராஜபக்சே! அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
rajabaksha




தமிழக அரசியல்வாதிகளைப் போல, இலங்கையின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சேவும் மாந்த்ரீகம், ஜாதகம், யாகம் உள்ளிட்டவைகளில் அதீத நம்பிக்கைக் கொண்டவர். 

 

தமிழக அரசியல்வாதிகளில் மறைந்த ஜெயலலிதாவுக்கு கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணம், ஜாதக கணிப்பு, அவர்கள் செய்யும் யாகம் உள்ளிட்டவைகளில் தான் அதிக நம்பிக்கை. 
 


அந்த வகையில், மகிந்த ராஜபக்சேவுக்கும் கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணத்தில்தான் நம்பிக்கை அதிகம். அரசியல் ரீதியாக தனக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம் கேரள நம்பூதிரிகளிடம் யோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஜபக்சே. 
 


இலங்கை அரசியலில் இதற்கு முன்பு அவர் பெற்ற பல வெற்றிகளுக்கு கேரள நம்பூதிரிகள் மந்திரித்துக் கொடுத்த மந்திரகோல்தான் காரணமாக இருந்தது என ஆட்சியில் இருந்தபோது பலமுறை தனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார் ராஜபக்சே! 



அதற்கேற்ப முக்கிய இடங்களில் அவர் மந்திரக்கோலுடன் வருவதைக்கண்டு இலங்கை அரசியல் தலைவர்கள் ஆச்சரியப்பட்டதுண்டு. பலருக்கு அந்த மந்திரக்கோல் பீதியை ஏற்படுத்தியதும் உண்டு. 

 

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டும் அவரால் அதிகாரத்தில் அமர முடியவில்லை. அவரது பிரதமர் பதவுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள். அதனால், அவரது பிரதமர் பதவி குறித்தக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரமால் இருக்கிறது. பிரதமர் பதவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பும்  சாதகமாக வராது என்றே அவரிடம் அவரது சட்ட நிபுனர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதனால் மன உளைச்சல்களுக்கு ஆளான ராஜபக்சே, தனது கேரள நம்பூதிரி நண்பர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்புவிற்கு வரவழைத்துள்ளார். கொழும்பு சென்ற நான்கு நம்பூதிரிகள், ராஜபக்சேவுடன் அவரது மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகளும் யாகமும் நடந்தது. அந்த பூஜையின் முடிவில் பல மாந்ரீகங்கள் அடங்கிய மந்திரக்கோல் தயாரிக்கப்பட்டு அதனை ராஜபக்சேவிடம் தந்துள்ளனர். தற்போது அந்த மந்திரக்கோலுடன் வலம் வருகிறார் ராஜபக்சே! அதைக்கண்டு, " மீண்டும் மந்திரக் கோலா?"  என அதிர்ச்சியடைந்துள்ளனர் இலங்கை அரசியல்வாதிகள்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.