Skip to main content

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ள இந்திய வம்சாவளி நபர்! 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

The race for the post of British Prime Minister of Indian origin has taken the lead!

 

பிரிட்டனில் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படும் ரிஷி சுனக், பிரதமர் போட்டியில் இருக்கும் மற்றவர்களில் இருந்து மாறுப்பட்ட கொள்கைகளை உடையவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான போட்டி வரை முன்னேறியது எப்படி? என்று விரிவாகப் பார்ப்போம்.

 

பணவீக்கமே முதல் எதிரி. இதனை கட்டுப்படுத்துவதே முதன்மை பணியாக இருக்கும். பணவீக்கம் கட்டுக்குள் வரும் வரை வரிகள் குறைப்பு கிடையாது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பானதாக இருப்பதை உறுதிச் செய்ய, எளிதில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளேன். இக்கூற்றுகளே பிரதமர் பதவிக்கான போட்டியில் மற்றவர்கள் மத்தியில் இருந்து ரிஷி சுனக்கை தனித்துக் காட்டியுள்ளது. 

 

அவரைத் தவிர போட்டியில் உள்ள அனைவரின் முதன்மை வாக்குறுதியும் வரிக் குறைப்பு என்பதாகவே உள்ளது. கடந்த 2020- ஆம் ஆண்டு பிரிட்டனின் நிதியமைச்சர் பொறுப்பையேற்று ரிஷி சுனக், கரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதார விவரங்களை சிறப்பாக கையாண்டதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். 

 

பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆதரவாளராக அறியப்பட்ட ரிஷி சுனக்தான், இருவரின் கொள்கைகளும், செயல்பாடுகளும் ஒரே திசையில் இல்லை எனக் கூறி முதன் முதலில் பதவியில் இருந்து விலகினார். இந்த முடிவை போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தான், பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ளார் ரிஷி. 

 

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தம்பதிக்கு கடந்த 1980- ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் பிறந்தவர் ரிஷி சுனக். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியலைக் கற்றறிந்தவர். செயிண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வர்த்தக மேலாண்மையை கற்றபோது தான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷிதாவைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, இருவரும் மணந்துக் கொண்டனர். 

 

கடந்த 2015- ஆம் ஆண்டில் ரிச்மாண்ட் நாடாளுமன்ற உறுப்பினராக ரிஷி சுனக் தேர்வானார். படிப்படியாக வளர்ந்த அவர், தெரசா மே தலைமையிலான கான்சர்வேட்டிவ் அமைச்சரவையில் இளநிலை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அதன் பின்னர், போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய ரிஷி சுனக், நாட்டின் நிதியமைச்சராக ஆற்றிய பணியை அவரைப் பிரதமர் பதவிக்கான போட்டி வரை கொண்டு வந்திருக்கிறது. 

 

பல்வேறு கடினமான காலகட்டங்களை கடந்து வந்த ரிஷி அடுத்தடுத்த சுற்று வாக்குப்பதிவுகளில் வெற்றிப் பெற்று பிரிட்டன் அமைச்சரவையில் தலைமைப் பொறுப்பேற்பாரா என்ற கேள்விக்கு அடுத்த சில நாட்களில் விடை கிடைக்கும்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
New Prime Minister sworn in in Pakistan!

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதே சமயம் தேர்தல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் 33வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். 

Next Story

நிலவி வந்த இழுபறி; பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் அறிவிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Pakistan's new prime minister announced

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி  புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து ஐந்து நாட்கள் ஆன பிறகும், புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.