இங்கிலாந்து நாட்டின் இளவரசரும் ராணி எலிசெபத்தின் கணவருமான பிலிப் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. 97 வயதான இளவரசர் பிலிப் சென்ற கார் சாலையின் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து காயமடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் நலமுடன் இருக்கிறார். மேலும் விபத்து நடந்த பொது ஓட்டுநர்கள் இருவரும் மது அருந்தியிருந்தார்களா என சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் இருவருமே மது அருந்தவில்லை என உறுதியானதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்தில் சிக்கி இங்கிலாந்து இளவரசர் படுகாயம்...
Advertisment