Skip to main content

இளைஞர்கள் புகைபிடிப்பதைத் தடுக்க பிரதமர் திட்டம்!

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Prime Minister's plan to prevent young people from smoking!

 

இளைய தலைமுறையினர்கள் சிகரெட் வாங்குவதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

 

சிகரெட் புகைக்கும் வயதை உயர்த்தும் வகையில், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் புதன்கிழமை முன்மொழிந்தார். மேலும், இளைய தலைமுறையினர் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யவும் அவர் கேட்டுக்கொண்டார். ஒருவேளை இது சட்டமாக்கப்பட்டால் உலகிலேயே மிகக் கடுமையான புகைபிடித்தலுக்கு எதிரான சட்டங்கள் எனலாம். அதேசமயம், குழந்தைகளுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் ஐரோப்பாவின் முதல் நாடாக பிரிட்டன் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, 2040க்குள் இளைஞர்களிடம் இருக்கும் புகைப்பழக்கத்தை அகற்றிவிடலாம் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

 

இது பற்றி பிரதமர் சுனக் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் புகைபிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்தி, படிப்படியாக இளம் தலைமுறையினரை ஸ்மோக் ஃப்ரீ சமூகமாக மாற்றி உடல் ஆரோக்கியத்தையும் தேற்றலாம்” எனக் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “புகைபிடிப்பதால் பிரிட்டனின் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 17 பில்லியன் பவுண்டுகள் ($20.6 பில்லியன்) செலவிடப்படுகிறது. மாறாக, மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளையும் கால் பங்கு அளவு குறைக்கலாம். இந்தக் கொள்கை, சில பெரிய சிகரெட் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” எனவும் அவர் தெரிவித்தார்.

 

இதேபோன்ற புகைபிடித்தல் தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு நியூஸிலாந்து அரசும் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சட்டம்  2027ல் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; ஹாலிவுட்டையே மிஞ்சும் ரியல் ஹைஜாக்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

A ship stuck in the middle of the sea; a real hijack that surpasses Hollywood


நடுக்கடலில் கப்பல் ஒற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த தனியார் நபரின் 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜப்பானிய நிறுவனம் இயக்கிவந்த இந்த கப்பலை ஹெலிகாப்டர் மூலம் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென கப்பலில் இறங்கி கப்பல் கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி, கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பலை ஹைஜாக் செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஹவுதி நாட்டின் டிவி சேனல்களில் கப்பலை ஹைஜாக் செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தையும் தாண்டும் அளவிற்கான இந்த ரியல் ஹைஜாக் காட்சிகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.

 

இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள 25 குழுவினர்களும் இஸ்லாமிய சட்டப்படி நடத்தப்படுவர் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.