பிரிட்டிஷ் ராணி இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் இலங்கை அதிபர்!

The President of Sri Lanka participates in the funeral of the British Queen!

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் இலங்கை அரசின் சார்பாக, அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்க உள்ளார். ராணி மறைவையொட்டி, வரும் செப்டம்பர்- 19 ஆம் தேதி அன்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

1972- ஆம் ஆண்டு இலங்கை குடியரசு ஆகும் வரை அந்நாட்டு ராணியாக இரண்டாம் எலிசபெத் இருந்தார். 1954 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு ராணி பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Subscribe