
துருக்கி - சிரியாவில் சில தினங்கள் முன் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில் நேற்று நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 544 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.