Skip to main content

அரசியல்வாதிகள் காலில் விழுந்து முத்தமிட்ட போப் பிரான்சிஸ்...

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

புனித வியாழனான நேற்று வாடிகன் நகரில் நடந்த தூய்மை சடங்கில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் தெற்கு சூடான் நாட்டின் அரசியல் தலைவர்களின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

pope francis kissed south sudan policians feet

 

தெற்கு சூடான் கடந்த 2011 ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்தது. அது முதல் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு கடும் பஞ்சமும், நிலையற்ற பொருளாதார சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் அந்த உள்நாட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி நேற்று நடந்த விழாவில் போப் பிரான்சிஸ் தெற்கு சூடானின் அரசியல் தலைவர்களின் காலில் விழுந்து அவர்களின் கால்களில் முத்தமிட்டு போரை நிறுத்த வேண்டினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தெற்கு சூடான் தலைவர்கள் குழப்பத்தில் நின்றனர்.இது குறித்து தெற்கு சூடானின் துணை அதிபர்களில் ஒருவரான ரெபேக்கா கரங் கூறும்போது, ''இதுபோன்ற நிகழ்வை நான் பார்த்ததே இல்லை. அவர் அப்படி செய்த போது என்னை அறியாமல் நான் அழ ஆரம்பித்து விட்டேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இவர்கள் எப்போது போர்க் கதைகளை முடிப்பார்கள்” - போப் பிரான்சிஸ் வேதனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Pope Francis laments Israel-Palestine conflict

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் போப் பிரான்சிஸ், புனித பூமியில் நடக்கும் போர் என்னை பயமுறுத்துகிறது. இவர்கள் எப்போது போர் கதைகளை முடிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஒன்றாக வாழ வேண்டிய இரு நாட்டு மக்கள். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஜெருசேலம் நகரை ஐ.நா நிர்வகிக்கும் வகையில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒஸ்லோ ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் ஒஸ்லோ ஒப்பந்தம். இதில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் வன்முறை கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சூடானில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள் கண்ணீர் பேட்டி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

sudan return tamil people chennai and madurai airport 

 

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

 

இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக மீண்டும் சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே தீவிரமாகப் போர் நடைபெற்று வருகிறது . இதில் சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் மற்றும் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் பொதுமக்கள் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதி செய்தது. முன்னதாக இந்தியத் தூதரகம் சார்பில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.

 

மேலும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "சூடானில் சிக்கியிருக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஐஎன்எஸ் சுமேதா என்ற மீட்பு கப்பல் சூடான் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படையின் சி 130 ஜே 2  என்ற ராணுவ விமானங்கள் சவுதியில் உள்ள ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 500 இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அனைவரும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சூடானில் வசித்து வந்த 9 தமிழர்கள் உட்பட 360 பேர் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். பின்னர் அங்கிருந்த தமிழர்கள் விமானம் மூலம் 4  பேர் சென்னையும்,  5 பேர்  மதுரையும் திரும்பினர். சொந்த ஊர் திரும்பியவர்களை விமான நிலையத்தில் இருந்த அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். மேலும் அவர்கள் நாடு திரும்புவதற்கு அனைத்து உதவிகளையும் செய்த  மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

நாடு திரும்பியவர்கள் விமான நிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "சூடானில் நாங்கள் வசித்த பகுதி போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் அது முக்கிய பகுதி என்பதால் இரு தரப்பினரும் அந்த பகுதியை குறிவைத்து சண்டை போடுகிறார்கள். மக்களை தாக்கமாட்டோம் என்று போரில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் அவர்கள் வீசும் குண்டுகள் மக்கள் மீது பட்டு சேதத்தை ஏற்படுத்துகிறது. சூடானில் இருந்து சம்பாதித்து எல்லாத்தையும் விட்டு விட்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அணிந்திருக்கும் ஆடைகள் மட்டும்தான் எடுத்து வந்திருக்கிறோம். அங்கு போர் தொடங்கியதில் இருந்து உணவு, குடிநீர், மின்சாரம் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்தோம். கதவுகள் அனைத்தையும் அடைத்து வைத்து விட்டு இருளில் பயத்துடன் சத்தமில்லாமல் இருந்தோம்" என்றனர் கண்ணீருடன்.