கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் போப் ஆண்டவர். இப்போது ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோஎன்பவர் போப் ஆண்டவராகஇருந்து வருகிறார். கடந்த 2013 ஆம்ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டஇவர்போப் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார்.
இந்தநிலையில் பெருங்குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தபோப் பிரான்சிஸுக்கு கடந்த ஜூலை மாதம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சூழலில்போப் பிரான்சிஸ், போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து புதிய போப் ஆண்டவரைத்தேர்ந்தெடுப்பதற்கானகூட்டம் வாடிகனில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில்போப் பிரான்சிஸ்ஸ்பானிஷ் வானொலிக்கு அளித்த பேட்டியில், போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலகப்போவதாக வந்த தகவல்களைத்திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது மனதில் பதவி விலகுவது குறித்தஎண்ணமே எழவில்லை எனவும்போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.