Skip to main content

கோவில் மரத்திற்கு முன்பு எக்குத்தப்பாக புகைப்படம்... சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி

Published on 08/05/2022 | Edited on 09/05/2022

 

Photo taken in front of the temple tree ... Model in controversy

 

700 வருட பாரம்பரியம் கொண்ட கோவில் முன் அமைந்துள்ள புனித மரத்திற்கு முன்பு ரஷ்ய மாடல் அழகி ஒருவர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தோனேஷியாவில் உள்ள பாலி என்ற இடத்திற்கு சுற்றுலா வந்த ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி அலீனா ஃபஸ்லீபா, தபனான் என்ற இடத்தில் உள்ள 700 வருட பழமையான மரத்தின் முன்பு நிர்வாணமாக புடைபடம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அங்குள்ள உள்ளூர் மக்களால் அந்த மரம் புனிதமாக போற்றப்படும் நிலையில் அலீனாவின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷ்ய மாடல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தோனேஷியாவின் ஐ.டி.இ சட்டத்தின்படி இந்த குற்றத்திற்கு அபராதத்தோடு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை மாடல் அழகி இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியத்துடன் இதுதொடர்பாக மன்னிப்பும் கோரியுள்ளார். அந்த மரத்தின் வரலாறு, புனிதம் குறித்து தமக்கு தெரியாது என்று தெரிவித்துள்ள அவர், அங்கு மீண்டும் சென்று அந்த மர்த்திற்கு முன்பு அமர்ந்து மன்னித்துக்கொள்ளும்படி மனம் உருகி வேண்டிக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.