Skip to main content

பைக்கில சிங்கிள்ஸ் பார்த்திருப்பிங்க...ஃபிளைட்ல பார்த்திருக்கிங்களா?

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
solo flight


விமானத்தில் தனியாக செல்ல வேண்டும் என்றால் நம்மிடம் தனிவிமானம் இருக்க வேண்டும் அல்லது அனைத்து டிக்கெட்டையும் வாங்கும் அளவுக்கு வசதி இருக்க வேண்டும். இது எதுவும் இல்லை நானே சாதாரான டிக்கெட்டை எடுத்துவிட்டுதான் விமானத்தில் செல்கிறேன் என்றால், நம்மை தவிர வேறு யாரும் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது. பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மேலே சொன்னவற்றில் கடைசியாக குறிப்பிட்டுள்ள விஷயம்தான் நடந்திருக்கிறது. விமானத்தில் சாதாரான எக்கனாமி கிளாஸ் டிக்கெட்டை வாங்கிவிட்டு, யாரும் இல்லாத விமானத்தில் ஒருவராக பயணித்திருக்கிறார் லூயிஸ் என்ற பெண். 
 

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பிளிப்பைன்ஸ் நாட்டில் லூயிஸ் எரிப்ஸ் என்ற பெண் டாவோவில் இருந்து மனாலி என்னும் ஊருக்கு செல்ல பிளிப்பைன்ஸ் ஏர்லைன்ஸில் டிக்கெட் புக் செய்திருக்கிறார். விமான நிலையத்திற்கு வந்து விமானம் ஏறி உள்ளே அமர செல்லும் வரை அவருக்கு அது ஒரு சாதாரான விமான பயணமாக இருக்கும் என்றே நினைத்திருக்கிறார். ஆனால், விமானத்திற்கு உள்ளே சென்று சென்று அமர்ந்தபோதுதான் தெரிந்திருக்கிறது தான் ஒருவர் மட்டும்தான் இந்த விமானத்திலேயே பயணம் செய்கிறோம் என்று. முதலில் விமானத்தில் இருக்கும் அனைத்து சீட்டுகளும் காலியாக இருந்ததால் பயந்திருக்கிறார். பின்னர் அது பலகுவிட்டதால் விமானம் மேலே சென்றபோது பயமும் பறந்துவிட்டது.
 

ticket


அந்த விமானத்தில் லூயிஸை தவிர, விமான வேலை பார்பவர்கள் மட்டுமே அவருடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் அனைத்து பயணிகள் இருக்கும்போத் கொடுக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற சொல்லி மைக்கில் பேசியுள்ளனர். அவருக்கு உணவு, டிரிங்ஸ் அனைவருக்கும் தருவதுபோன்று தந்து, அவருடைய பயணத்தை மேலும் சிறப்பித்துள்ளனர். 
 

விமானத்தில் ஒருவர் மட்டுமே இருப்பதை மொபைலில் புகைப்படம் எடுத்து, பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திகொண்டார். விமான கேபினில் இருந்த விமான பையலட், பணிப்பெண்கள் ஆகியோர் லூயிசுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். விமானத்தில் இதுபோன்று தனி ஆளாக பயணம் செய்வது இது புதிதல்ல, பலருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

10 வருடத்துக்குப் பிறகு பிறந்த குழந்தை; மனைவியை சந்தேகப்பட்ட கணவன் - பெண் டிடெக்டிவ் யாஸ்மினிடம் வந்த வழக்கு

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

தக

 

தமிழ்த் திரைப்படங்களில் துப்பறியும் நடிகர்களை நிறையப் பார்த்திருப்போம். குறிப்பாகப் பழைய படங்களில் இந்த துப்பறியும் கதைகளில் முக்கிய நடிகர்கள் அதிகம் நடித்திருப்பார்கள். திரைத்துறையில் வருவதைப் போலத்தான் துப்பறியும் பணி இருக்குமா? அதில் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து பெண் துப்பறிவாளர் ஜாஸ்மின் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 


தமிழ் திரைத்துறையில் எத்தனையோ துப்பறியும் நபர்களையும், கதைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். திரைத்துறையில் வரும் நபர்களைப் போலத்தான் நிஜத்திலும் துப்பறியும் பணி இருக்குமா? இல்லை வேறு மாதிரியான கோணத்தில் அணுகுவீர்களா?

 

அதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும், நாங்கள் ஒரு கேஸ்ஸ ஒருநாள் ஃபாலோ பண்ணுவோம், சில சமயம் 15 வரை ஃபாலோ செய்ற மாதிரி சூழ்நிலை இருக்கும். ஆனால் படத்தில் அப்படிச் செய்ய முடியாது. அதற்கான நேரமும் அவர்களுக்கு இருக்காது. இரண்டரை மணி நேரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் அவர்கள் சுருக்கி காட்ட முடியும். பெரும்பாலான காட்சிகள் இரண்டிற்கும் பொதுவாக அமைந்திருக்கும். சில சம்பவங்கள் திரையில் ஒரு மாதிரியாகவும், நேரில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். எந்த துப்பறியும் படம் சிறந்தது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தெகிடின்னு ஒரு படம் வந்தது; அதுவேணா நாங்க செய்கிற மாதிரி காட்சிகள் பல ஒத்துப் போயின. வேறு படத்தைப் பத்தி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.  எனக்கு எப்பவுமே ஜேம்ஸ்பாண்ட் தான். 

 

நீங்கள் பல கேஸ்சில் புலனாய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்திருப்பீர்கள், ஆரம்பத்தில் உங்களுக்கே டஃப் கொடுத்த சம்பவமாக எதைப் பார்க்கிறீர்கள்?

 

ஒரு ஜோடி ஐந்து வருடம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 10 வருடங்களாகக் குழந்தை இல்லை. இதனால் அந்த வீட்டில் அதிக அழுத்தம் தர ஆரம்பித்தார்கள். இருவரும் மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்து செக் பண்ணி பார்த்தார்கள். இதில் அந்த ஆணுக்கு விந்தணு போதிய அளவு இல்லாதது தெரிய வந்திருக்கிறது. இதை அந்த வீட்டில் சொல்ல முடியாது. கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள். அந்த ஜோடிகள் எதைச் சொன்னாலும் இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். அதையும் தாண்டி அந்தப் பெண்ணை மலடி, குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியில்லாத பெண் போன்ற கடினமான வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள்.

 

அந்தப் பெண்ணும் இதைப் பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் பற்றி இருவருமே யாரிடமும் கூறவில்லை. ஏனென்றால் இருவருமே அதிகப்படியான அளவு நேசித்தார்கள். ஆனால் அந்தப் பெண் கணவரிடம் பேசி இதை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் அனைவரும் கேட்கும்போது நம்மால் பதில் சொல்ல முடியாது. கடினமாக இருக்கும் இருவருக்குமே, அதனால் டோனர் மூலம் சிகிச்சை எடுத்து அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதற்கு அவரின் கணவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பெண் அந்த சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். 

 

நாளடைவில் அந்தப் பெண்ணின் கணவர் மனைவியிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். குழந்தையைக் கொஞ்சுவதைக் கூட நிறுத்திவிட்டார். குடிப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார். என்ன செய்வது என்று யோசித்த அந்தப் பெண் எங்களிடம் வந்து கணவரின் செயல்பாட்டில் சந்தேகம் உள்ளது. வேறு ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறதா? என்பதைக் கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று கூறினார்.

 

நாங்களும் அவர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வரை அவரை பல நாட்கள் தொடர்ந்து கவனித்து வந்தோம். அவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. இதை அவரின் மனைவியிடம் கூறினோம். இல்லை, அவர் என்ன நினைத்துக்கொண்டு இவ்வாறு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துக் கூறுங்கள் என்றார். நாங்கள் கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறினோம். அவர் தினமும் மது அருந்தும் பாரில் எங்களின் ஆள் ஒருவரை அவரிடம் பேசிப் பழக வைத்தோம். 

 

கிட்டதட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு என் மனைவிக்கு இன்னொருவர் மூலம் குழந்தை பிறந்துள்ளது. 10 வருடத்துக்குப் பிறகு எங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அதை எனக்குப் பிறக்கவில்லை என்று என் உறவினரிடம் என்னால் சொல்ல முடியவில்லை என்றார். இதை அவரின் மனைவியிடம் நாங்கள் கூறினோம். அவருக்காக எல்லா கஷ்டங்களையும் நான் ஏற்றுக்கொண்டு இத்தனை நாள் இருந்தேன். கடைசியில் என்னையே அவர் சந்தேகப்படுகிறார் என்று வருத்தப்பட்டார். பிறகு இருவரையும் கூப்பிட்டு கவுன்சிலிங் கொடுத்தோம். தற்போது நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள்" என்றார்.

 

 

Next Story

மூதாட்டி கொலை... பள்ளி மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு 

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது மேலக்கல் பூண்டி. இந்த ஊரை சேர்ந்த ஐயாசாமி மனைவி பொன்னம்மாள். வயது 65. இவர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பொன்னம்மாளை உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

 

old lady



அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் தேதி மூதாட்டி பொன்னம்மாள் இறந்துபோனார். உடனே போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியை சேர்ந்த பலரையும் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர்.
 

இந்த நிலையில் வடகரா பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜிடம், ''பாட்டியை கொலை செய்தது நான்தான்'' என்று ஒப்புக்கொண்டு ஒரு பள்ளி மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் அந்த பள்ளி மாணவனை கைது செய்து விசாரித்தபோது, அவன் அளித்த வாக்குமூலத்தில் பாட்டி பொன்னம்மாளின் வீட்டின் அருகில் கிழக்கில் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொன்னம்மாள் தன் தோட்டத்தில் விளையும் பலவிதமான பழங்களை விற்பனை செய்வது வழக்கம். அதனால் பொன்னம்மாள் வீட்டிருக்கு நிறைய பள்ளி மாணவ மாணவிகள் அவ்வப்போது சென்று வருவது உண்டு.
 

சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் ஒருவன் அந்த பாட்டியிடம் பழம் வாங்கி கொண்டு அதற்குப் பதிலாக வெளிநாட்டு கரன்சி பணத்தைக் கொடுத்துள்ளான். விவரம் தெரியாமல் பணத்தை வாங்கிய பாட்டி பிறகு அதை மற்றவரிடம் காட்டியபோது அது வெளிநாட்டு பணம் இங்கு செல்லாது என சொன்னதும் கோபத்துடன் அதை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்ற பாட்டி, சம்பந்தப்பட்ட மாணவனிடம் என்னை ஏமாற்ற பார்த்தாயா என அவனை பலர் முன்னிலையில் கேட்டுள்ளார். 
 

பாட்டி தன்னை திட்டியதை மாணவன் அவமானமாகக் கருதினான். பாட்டியிடம் பணப்புழக்கம் உள்ளதை பார்த்துள்ளான். தன் தாயிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளான். அவர் தர மறுத்துள்ளார். இதனால் பாட்டி மீது உள்ள கோபத்திலும், தாய் செலவுக்கு பணம் தாராததாலும் பாட்டியிடம் உள்ள பணத்தை திருடுவது என  திட்டமிட்டு, அதன்படி ஒன்றாம் தேதி இரவு அந்த பாட்டி வீட்டருகே சென்றவன், நடு இரவில் வீட்டுக்குள் சென்று பாட்டி வைத்திருந்த பணத்தையும் செல்போனையும் திருடியுள்ளான். 


 

 

சத்தம் கேட்டு எழுந்த பாட்டி பொன்னம்மாள் அந்த மாணவனை கையும் களவுமாக பிடித்து விட்டார். சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைக்க முயலும்போது கோபமுற்ற சிறுவன், பாட்டி தன்னை காட்டிகொடுத்து விடுவாரோ என அச்சமடைந்து, அருகில் கிடந்த டார்ச் லைட்டை எடுத்து பாட்டியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளான்.


 

 

பாட்டி ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்ததும் சிறுவன் பணத்தையும் பாட்டியின் செல்போனையும் எடுத்து கொண்டு சத்தமில்லாமல் சென்றுவிட்டான். இந்த நிலையில் போலீசார் பாட்டியோட செல்போன் பற்றி கண்டறிய டவரை வைத்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த செல்போன் அந்த மாணவனின் தாயிடம் இருப்பதை கண்டறிந்தனர். அவரை 'அழைத்து கடுமையாக விசாரித்தனர் அப்போது வேறு வழியில்லாமல் மாணவன் தானே முன்வந்து பாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அவனை கைது செய்த  போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி  கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சென்று அந்த சிறுவனை அடைத்தனர்.