Skip to main content

மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரிய ஃபைசர்... இன்னொரு டோஸ் அவசியமா? - எஃப்.டி.ஏ விளக்கம்! 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

pfizer vaccine

 

உலகம் முழுவதிலும் கரோனாவிற்கெதிரான தடுப்பூசிகளில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஒன்று. தற்போது ஃபைசர் தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில், தற்போது தடுப்பூசியின் மூன்றாவது டோஸை மக்களுக்கு செலுத்த ஃபைசர் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது.

 

மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோருவது குறித்து பைசர் நிறுவனம், மூன்றாவது டோஸ் செலுத்திய பிறகு, ஆன்டிபாடிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வது தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. அதேநேரத்தில், மூன்றாவது டோஸ் அவசியமா அல்லது எப்போது மூன்றாவது டோஸை செலுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவு இல்லை எனவும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும், மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (F.D.A) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ள அமெரிக்கர்கள், மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ள தற்போது எந்த அவசியமும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

ஒமிக்ரானுக்கு எதிரான பிரத்தியேக தடுப்பூசி; ஆய்வக சோதனைகளை தொடங்கியது பைசர்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

pfizer

 

இந்தியா மற்றுமின்றி  பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது.

 

இந்தச்சூழலில், ஏற்கனவே கரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள், தங்களது தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆராயத் தொடங்கின. மேலும் பைசர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒமிக்ரானுக்கு எதிராக, பிரேத்தியேக தடுப்பூசியை தயாரிக்கப்போவதாக அறிவித்தன.  

 

இந்தநிலையில் பைசர் தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரான் வகை கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள பிரேத்தியேக தடுப்பூசியின் ஆய்வக பரிசோதனைகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் பைசர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.