ADVERTISEMENT

மாஸ்க் அணிய சொன்ன பெட்ரோல் பங்க் ஊழியர் சுட்டுக்கொலை!

03:52 PM Sep 23, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெர்மனியில் பெட்ரோல் போட வந்த நபர், மாஸ்க் அணியச் சொன்ன ஊழியரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் மெலன் நகரில் பைக்கில் வந்த ஒரு முதியவர் அங்கிருந்த பணியாளரிடம் பெட்ரோல் போட சொல்லியுள்ளார். அவரை கவனித்த பணியாளர், அவர் மாஸ்க் அணியாததைக் கண்டதும், மாஸ்க் அணிந்திருந்தால்தான் பெட்ரோல் போட முடியும் எனக் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் செய்த அந்த முதியவர், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த இடத்தைவிட்டுச் சென்றுள்ளார்.

ஒருமணி நேர இடைவெளியில் மீண்டும் மாஸ்க் அணிந்து வந்த அவர், பெட்ரோல் போடச் சொல்லியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீரென கைகலப்பு ஆகியுள்ளது. இதில், கீழே விழுந்த அந்த முதியவர், பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞரை தலையில் சுட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT