Skip to main content

ஏமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு...

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கடந்தவாரம் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் ஆலையில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலில் அந்த ஆலை சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 

petrol price may gets higher in india after saudi oil factory accident

 

 

இதன் காரணமாக, இன்று காலை சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 10.2 சதவீதம் அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை இந்த ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட தீயை இன்னும் முழுமையாக அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதன்காரணமாக அந்த ஆலையின் 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. தினமும் 1 கோடி பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்படும் அந்த ஆலையில், தற்போது வெறும் 50 லட்சம் பீப்பாய்களே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் இன்று காலை அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கையில் காசில்லை, பசி, பட்டினி; கதறும் மகன்; கண்ணீர் வடிக்கும் தாய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023
ad

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.

 

மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.

 

 

Next Story

இஸ்ரேலுக்கு நெருக்கடி; போரில் களமிறங்கிய ஏமன்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Yemen entered the conflict against Israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இதையடுத்து காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

 

காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோடர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி அமைப்பு தற்போது போரில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருந்து செயல்படும் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் சண்டையிட்டு வரும் நிலையில், தற்போது ஹவுதி அமைப்பு அந்த போரில் குதித்துள்ளது இஸ்ரேலை மேலும் கவலையடையச் செய்துள்ளது. பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது. செங்கடலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியுள்ளது. இஸ்ரேல் தற்போது ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி என மும்முனை தாக்குதலை எதிர்கொண்டு வருவதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.