Skip to main content

முதல்வர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட மனு... விசாரணைக்கு வந்தவர் குற்றவாளிக்கு சாதகமான அவலம்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

Petition sent to the Chief Minister's private unit ... The person who came for the hearing is in favor of the culprit

 

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துமனையில் ரவிக்குமார் என்பவர் துப்பரவு பணியாளராக 23 வருடங்களாக பணிபுரிந்துவந்துள்ளார். ஜி.ஓ.வின் படி ஒன்றறை ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்திருந்தால் அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து  அவரது கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு முடித்திருந்தால், அவருக்கு  ஓ.ஏ., ஆர்.சி. பணியும். அதேபோல 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் கிளர்க் பணி வழங்க வேண்டும் என்பது விதியாக இருக்கும் பட்சத்தில், போதுமான கல்வித் தகுதி இருந்தும் சாதிய வேறுபாடு காரணத்தால், இதுவரையிலும் எந்தப் பணி உயர்வும் வழங்கப்படாமலும், அவ்வபோது கூடுதல் பணிச் சுமையையும் வழங்கியுள்ளார் கண்காணிப்பாளர் வெங்கடமதுபிரசாத் .

 

அதற்கு ரவிக்குமார், “எதற்காக இப்படி என்னைப் பழிவாங்கறீங்க” என்று கேட்டதற்கு, சாதி பெயரைச் சொல்லி, “உனக்கு ஓ.ஏ வேலை கேட்குதோ” என்று கண்காணிப்பாளர் வெங்கடமதுபிரசாத் திட்டியுள்ளார் என்று முதல்வர் தனிப்பிரிவுக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையத்திற்கும் மனு அனுப்பிவைத்துள்ளனர். இந்த மனுவின் அடிப்படையில், அயனாவரம் ஏசி சரவணன் தலைமையில் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், குற்றத்தை நேரில் பார்த்தவர்களான லிஃப்ட் ஆப்ரேட்டர் சிவலிங்கம், சீனிவாசன், உதவி மருத்துவர் ராஜ்குமார், ஓட்டுநர் முருகேசன் ஆகியோரிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவரைப் பற்றி  கூடுதலாக டாக்டர், செவிலியர், துப்பரவு பணியாளர் என 20 நபர்களிடம் ஒருமாத காலம் விசாரித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கண்காணிப்பாளர் திட்டியது உண்மையே என்றும், “அவர் செய்யும் லீலைகள் எவ்வளவோ இருக்கிறது, சொன்னால் மாளாது” என்று கூறியுள்ளனர்.

 

இந்த விசாரனை முடிந்து ஒருமாத காலம் ஆகியும் ஏசி சரவணன் இதுவரையிலும் வெங்கடமதுபிரசாத் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் வெங்கட மதுபிரசாத்துக்கு சாதகமாக செயல்பட்டுவருகிறாராம். இந்நிலையில் பாதிகப்பட்ட ரவிகுமார் கூறுகையில், “நான் பதவி உயர்வு கேட்ட காரணத்திற்காக கேவலமான வார்த்தைகளால் பல பேரின் முன்னால் என்னுடைய சாதி பெயரைச் சொல்லி, உனக்கு ஓ.ஏ வேலை கேட்குதா என திட்டி தலைகுணிய வைத்தார். எனக்கு அங்கையே சாகுனும்போல் இருந்தது. என்னை மட்டும் இல்லை, இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இதே கெதிதான் நடக்கிறது. இது தொடர்பாக  விசரானை முடிந்து ஒருமாத காலம் ஆகிறது. ஆனால் எந்த நடவடிக்கையுமே இல்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை” என்றார். 

 

இது தொடர்பாக டாக்டர் வெங்கடமதுபிரசாத்திடம் கேட்டபோது, “அதுபோன்ற எந்த விதமான செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. மேலும் விசாரணை நடந்துவருகிற சூழ்நிலையில் இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்றார். இது தொடர்பாக ஏசி சரவணனிடம் கேட்டபோது, “இன்னும் விசாரனை சென்றுகொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் மற்ற விசயங்களைச் சொல்ல முடியாது” என்றார். வெங்கடமதுபிரசாத் மீது ஏற்கனவே தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் பாலியல் விவகாரம் நிலுவையில் இருந்துவரும் சூழ்நிலைில், தற்போது வன்கொடுமை பிரச்சனையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.