இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் - WHO பரிந்துரை!

WORLD HEALTH ORGANISATION

கரோனாபரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அதேநேரத்தில் ஒமிக்ரான்வகை கரோனாகண்டுபிடிக்கப்பட்டதன்காரணமாக மேலும் சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆலோசிக்க தொடங்கின.

இந்தநிலையில்உலக சுகாதார நிறுவனத்தின்நோய் எதிர்ப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனை குழு கூடி,கரோனாபூஸ்டர் டோஸ்கள் குறித்து ஆலோசித்தது. இந்த ஆலோசனைக்கு பிறகு அக்குழு, உடல்நல பிரச்சனைகள்உள்ளவர்களும், இன் ஆக்டிவேட்டடு (inactivated) கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட்ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பூசிஇன்-ஆக்டிவேட்டடுதடுப்பூசி வகையைசேர்ந்ததாகும்.

covaxin VACCINE
இதையும் படியுங்கள்
Subscribe