Advertisment

வெடிவிபத்தைத் தொடர்ந்து லெபனானில் வெடித்த மக்கள் போராட்டம்...

people gathered near at parliament of lebanon

பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை இந்த விபத்தில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், 3,00,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இதற்கான காரணம் எனக் கூறப்படும் நிலையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லெபனான் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசி எறிந்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் கலவரத் தடுப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

lebanon
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe