Pakistan's decision to claim the name India

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்றநாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதையடுத்து 20வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா புறப்படுகிறார். இந்த பயண நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல் குறிப்பில் இந்திய பிரதமர் என்பதற்குப் பதிலாக ‘பாரத பிரதமரின் இந்தோனேசிய பயண நிகழ்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இதுகுறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி,பாரத் என்ற பெயருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், கிரிக்கெட், ரயில் போன்ற பலவற்றையும் ஆங்கிலேயர்கள்தான் கொடுத்தார்கள். அதனால் அனைத்தையும் மாற்றிவிடலாமா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

இது ஒருபுறமிருக்க, இந்தியா என்ற பெயர் உங்களுக்கு வேண்டாம் என்றால் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று பாகிஸ்தானில் பலரும் கூறி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா தனது நாட்டின் பெயரை பார்த் என்று மாற்றினால், ஐ.நாவில் இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோர வேண்டும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே இண்டஸ்(Indus) எனும் பகுதி பாகிஸ்தானில் இருப்பதால், அதனைக் குறிக்கும் வகையில் இந்தியா பெயரை பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.