இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உலக அளவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழ்ந்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த படியாக, இந்தியா ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. வரும் 2020-ம் ஆண்டில் ஆள் இல்லாமலும், 2021-ம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த நிலையில் இந்தியாவின் இந்த முயற்சிக்கு போட்டியாக பாகிஸ்தானும் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தானின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன், " சீனாவின் உதவியுடன் விண்ணுக்கு மனிதனை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு தொடங்கும். சீனாவுடன் இணைந்து இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக 50 வீரர்களைத் தேர்வு செய்து, பின்னர் 2022-ம் ஆண்டில் அதிலிருந்து 25 வீரர்களை மட்டும் தேர்ந்தெடுப்போம். பின்னர் அதில் ஒருவரைத் தேர்வு செய்து விண்வெளிக்கு அனுப்புவோம் இந்த திட்டத்தில் பாகிஸ்தான் விமானப்படை முக்கியப் பங்காற்றும்" என தெரிவித்தார்.