பாகிஸ்தானில் வழக்கமாக மொஹரம் பண்டிகை நாட்களில் பால், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றின் விலை உயருமாம். அந்த வகையில் பாகிஸ்தானில் மொஹரம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நேரத்தில் பாகிஸ்தானில் காய்கறி போன்ற பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகரான கராச்சி, சிந்த், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 120 ல் இருந்து ரூ. 140 வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் பொதுமக்கள் கூறுகையில், 'இப்போதைய நேரத்தில் பாலின் வரத்து குறைந்துள்ளது. இவ்வளவு அதிகமாகப் பால் விலை செல்லும் எனக் கனவில்கூட நினைக்கவில்லை. குழந்தைகளுக்குப் பால் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது. அதனால் எவ்வளவு விற்றாலும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்' என்கின்றனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.
5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் வழங்கிய பாரத்பால் நிறுவனத்தினர் நம்மிடம், புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பதை 2018 கஜா புயலின் தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு உணர்ந்தவர்கள் நாங்கள். பல நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஆனால் சென்னையில் அதெல்லாம் சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. எங்கள் மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் மக்கள் உடனே வேலைக்கு போகவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ முடியாத நிலையில் இருப்பார்கள் என்பதால், எங்கள் பாரத் பால் நிறுவனம் சார்பில் 5 லட்சம் லிட்டர் பால் கொண்டு வந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி இருக்கிறோம் என்றனர்.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலருக்கும் இன்று அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான பால் பாக்கெட்கள் கிடைக்காததால் பொது மக்கள் பெரிதும் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “சென்னையில் நாளை (06.12.2023) காலை முதல் பால் விநியோகம் முழுமையாக சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், “சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்படும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்காக அதிகளவில் மீனவர்களின் படகுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.