Skip to main content

என்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க!!! 

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
pager


90 களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக  பேஜர் சேவை பற்றியும், பேஜரில் மெசேஜ் வந்தால் அதிலிருந்து வரும் ஒலியும் தெரிந்திருக்கும்.  சிறிய கால்குலேட்டர் போன்ற வடிவில், ரேடியோ அதிர்வலையை பயன்படுத்தி வெறும் மெசேஜ் மட்டுமே அனுப்பக்கூடிய சேவை. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஜப்பானில் இந்த சேவையை 1500 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
 

1950-60 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த பேஜர், 1980களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பிரபலமானது. மொபைல் போன்களை போன்று கையில் எடுத்துகொண்டு செல்ல வசதியாக அப்போதைய காலகட்டத்தில் இருந்தது பேஜர்தான். 90 களில் உலகம் முழுவதும் பல்வேறு வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது இந்த பேஜர் சேவை. தற்போது இந்த சேவையை வைத்திருக்கும் ஜப்பானை சேர்ந்த டோக்கியோ டெலி மெசேஜ் நிறுவனம், அடுத்த ஆண்டு செப்டம்பருடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
 

இந்த நிறுவனத்தில் தற்போது 1500 வாடிக்கையாளர்கள், பேஜர் சேவையில் உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பேஜர் கருவியை உருவாக்கும் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் கீழ் இருந்துள்ளனர். அதே ஆண்டில் பேஜர் சேவையை பயன்படுத்திய ஜப்பானியர்கள் மட்டும் ஒரு கோடி பேராம். பின்னர், காலங்கள் மாற மாற மொபைல் போன்களின் புரட்சி, பேஜர் நிறுவனங்களுக்கு வீழ்ச்சியை தந்தது. சுமார் நாற்பது வருடங்களாக இருந்த பேஜர் சேவை எல்லாம் மூடப்பட்டது. 
 

ஜப்பானுக்கே முதன் முதலில் பேஜரை அறிமுகம் செய்துவைத்த தொலைதொடர்பு நிறுவனமான என்.டி.டி, தன்னுடைய பேஜர் சேவையை 2007 ஆம் ஆண்டே நிறுத்திக்கொண்டது. அடுத்த 10 வருடங்கள் கழித்துதான் டோக்யோ டெலி மெசேஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 50 வருடங்களாக ஜப்பானில் இருந்த சேவையான பேஜர் சேவை முடிவடைய இருக்கிறது. முதலில் இந்த செய்தியை கேட்டபோது,  ‘இன்னுமா இந்த பேஜர் யூஸ் பண்றாங்க’ என்ற வியப்பு தவிர்க்கமுடியாததாக இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.