Advertisment

வன்முறையால் ஆத்திரமடைந்தேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

h

Advertisment

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு அமெரிக்க தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவத்தால் தான் ஆத்திரமடைந்ததாகவும், அமெரிக்கா எப்போதும் சட்டம் ஒழுங்கைக் கொண்ட நாடாகவே இருக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe