Skip to main content

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே 93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

OSCARS AWARDS ANNOUNCED BEST ACTRESS, ACTORS, MUSIC DIRECTORS, FILM DIRECTORS

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று (26/04/2021) காலை 06.30 மணிக்கு தொடங்கியது.

 

சிறந்த திரைக்கதைக்கான விருதை எமரால்ட் ஃபென்னல் பெற்றார்; திரைப்படம்: 'PROMISING YOUNG WOMAN'.

 

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கிறிஸ்டோபர் - ஃப்ளோரியன் ஆகியோர் பெற்றனர்; திரைப்படம்: 'THE FATHER'.

 

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் 'ANOTHER ROUND' பெற்றது. 

 

சிறந்த துணை நடிகை - டேனியல் கல்லூயா; திரைப்படம்: 'JUDAS AND THE BLACK MESSIAH'.

 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான விருதை செர்ஜியோ லோபஸ், மியா நியல் - ஜாமிகா வில்சன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 'MA RAINEY'S BLACK BOTTOM' என்ற திரைப்படத்துக்காக மூன்று பேரும் சிறந்த சிகையலங்கார விருதைப் பெற்றனர். 

 

சிறந்த இயக்குநருக்கான விருதை சீனாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார்; திரைப்படம்: 'NOMADLAND'. சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமையை க்ளோயி சாவ் பெற்றார்.

OSCARS AWARDS ANNOUNCED BEST ACTRESS, ACTORS, MUSIC DIRECTORS, FILM DIRECTORS

 

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஆன்ரோத் பெற்றார்; திரைப்படம்: 'MA RAINEY'S BLACK BOTTOM'.

 

சிறந்த குறும்படத்திற்கான விருதை ட்ராவன் - மார்ட்டின் பெற்றுக்கொண்டனர்; குறும்படம்: 'TWO DISTANT STRANGERS'.

 

சிறந்த ஒலிக்கான விருதை 'SOUND OF METAL' திரைப்படத்துக்காக ஐந்து பேர் பெற்றுக்கொண்டனர். இந்த திரைப்படத்திற்காக நிக்கோலஸ், ஜெய்ம், மிச்செலி, கார்லோஸ், பிலிப்  ஆகியோர் விருது பெற்றனர். 

 

சிறந்த படத்தொகுப்புக்கான விருதை 'SOUND OF METAL' படத்துக்காக மிக்கேல் நீல்சன் பெற்றுக்கொண்டார். சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை 'SOUL' என்ற திரைப்படத்துக்காக பீட் டாக்டர், டானா முர்ரே இருவரும் பெற்றுக்கொண்டனர்.

 

சிறந்த இசைக்கான விருதை 'SOUL' திரைப்படத்திற்காக ட்ரண்ட் ரெஜ்னார் - ரோஸ் - ஜான் பாட்டீஸ் ஆகியோர் பெற்றனர்.

 

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'TENET' திரைப்படம் சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது.

 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை 'MANK' திரைப்படம் தட்டிச் சென்றது.

 

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'NOMADLAND' படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் பெற்றார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'THE FATHER' திரைப்படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸ் பெற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.